Sunday, October 5, 2008

நான் ஊருக்குப் போறேன்....அல்வா... சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

இன்றிலிருந்து 5 நாளைக்கு நான் லீவு ஊருக்குப் போக இருப்பதால்.பதிவு எழுத ஆரம்பித்து 3 மாதம் ஆகிறது. 37 பதிவு எழுதிவிட்டேன் சொல்றதைவிட காப்பி பேஸ்ட் செஞ்சேனு சொல்லலாம். 10பதிவு தான் நான் சொந்தமாக ?? யோசித்து எழுதியது!!!.இருந்தும் இதுவரைக்கும் 2,000பேர் பார்த்திருக்காங்க ரொம்ப நன்றி.ரொம்ப நல்லவங்களாஇருக்காங்க.


ஊருக்குப் போனால் எவ்வித தொந்தரவு கிடையாது அதாவது முக்கியமாக தொலைக்காட்சி பக்கம் போகமாட்டேன். எங்க ஊருக்குப் போனால் என்னுடைய கைபேசிக்கும் விடுதலை தானாகவே தொடர்பு எல்லைக்கு வெளியில் வந்துவிடும்.


நான் ஊருக்கு போறேன்னு தெரிஞ்சாலே அல்வா வாங்கிட்டு வான்னு நண்பர்களிடம் இருந்து ஆரம்பித்து விடும். டேய் காசு கொடுங்கடா அப்படின்னா எல்லோரும் எஸ்கேப். நான் எஸ்கேப் ஆகிறதுக்கு பதில்' நான் திருநெல்வேலி போகமாட்டேன், தென்காசி வழியாபோவேன்டா' சொல்லி எஸ்கேப் ஆயிடுவேன். தென்கசியிலும் அல்வா நன்றாக இருக்கும். அதுவும் காசி விஸ்வநாதர் கொவில் சன்னதியில் உள்ள இரண்டு கடைகளிலும் நன்றாக இருக்கும். கடை பேர் மறந்துவிட்டது. திரும்ப சென்னைக்கு வந்து கொஞ்சமா அல்வாவை காண்பித்து எல்லோருக்கும் அல்வா கொடுத்துடுவேன்.


சென்னை வலைப்பதிவர் சந்திப்பு நன்றாக நடந்து முடிந்து விட்டதாக டோண்டு & தாமிரா எழுதியிருந்தாங்க  என்னால போக முடியலை. அடுத்தவாட்டி கண்டிப்பா கலந்துக்குவேன்.



என்னோட இன்னொரு வலைப்பாதிவையும் பாருங்கள்.

http://rajkanss.wordpress.com/

கருத்துரை இடுங்கள். என்னுடையய தவறுகளை சரிசெய்துகொள்கிறேன்.

0 comments: