Friday, August 14, 2009

ஒரே தண்ணி பிரச்சனை-ப்பா.......பதிவர் சந்திப்பை வைங்க

பன்றி காய்ச்சல பீதில எல்லோரும் இருக்கும் போது இவன் மட்டும் என்ன தண்ணி பிரச்சினைனு கிளம்புறான்னு தப்பு கணக்கு போடாதிங்க.......நான் சொன்னது வால் பையன் பிரச்சினையில்ல...............ராமாபுரத்தில் இருந்த வரைக்கும் இந்த பிரச்சினை வரவே இல்லை..ரெண்டு நாளைக்கு ஒரு முறை தவறாமல் குடி தண்ணீர் குழாயிலே வந்துவிடும்... வீட்டு ஓனர் பக்கத்துல கிடையாது....தண்ணீர் விசய்த்தில் பிரச்சினையே கிடையாது....

எப்ப பள்ளிக்கரணைக்கு வந்தேனோ.......அப்ப ஆரம்பிச்சிதுப்பா.....இங்க வந்ததுக்கப்புறம் குடிக்கிறதுக்கு கேன் தண்ணீர் தான்....பஞ்சாயத்து குழாயில் வரும் தண்ணிய வாயில கூட வைக்க முடியாது....பக்கத்துலயே வீட்டு ஓனர்......காலையில் 6 மணிக்கு எந்திச்சா டேப்புல தண்ணி வரது.......ஓனரை எழுப்பனும்.......இதே ஒரு வேலையாப்போச்சி அப்படினு பக்கத்து தெருவுக்கு வீடு மாறினேன்.

'தனியா உங்களுக்கு டேங்க் வச்சித்தாரேன்'..... ஆஹா பரவாயில்லையே. தண்ணி பிரச்சினையில்லப்பான்னு நினைச்சி டேங்கை பாத்தா.....அது டேங்க இல்ல டேங்க மாதிரி!!!.... சரி பரவாயில்ல... அப்படினு பாத்தா மோட்டார் சுவிட்ச் அவங்க வீட்டுக்குள்ள இருந்தது .மறுபடியும் அதே மாதிரி மறுபடியும் காலையில் எழுந்து தண்ணிக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.......

நீங்க தண்ணி அதிகமா யூஸ் பண்றீங்க ஆபடினு வேற அட்வைஸ்( அந்த டேங்க் தண்ணி ரெண்டு பேர் குளிப்பதற்கே பத்தாது)..இந்த கொடுமையில பஞ்சாயத்து தண்ணிய வேற வாரத்துக்கு ஒரு முறைதான் விடுறாங்க.. வேற வீடு பாக்கனும் ஓனர் பக்கத்துல இல்லாத வீடாத்தான் பாக்கனும்............
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பூறம் பதிவர் சந்திப்பு வச்சி ரொம்ப நாளவுது ராசாக்களா....... உங்களை பாத்து ரொம்ப மாசமாச்சு கண்ணுகளா???..........அதனால பிரபல பதிவர்களே நீங்க அத்திரிய பாக்கனும்னா உடனே பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க...எத்தன நாளைக்குத்தான் முகம் பாக்காம சண்டை போடுறது........தேதி விவரங்களை ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லுங்கப்பா.....அப்பதான் எங்க மேனேஜர்ட்ட டேமேஜ் இல்லாம டுட்டி மாத்திட்டு வர முடியும்..புரிஞ்சிதா..........

24 comments:

Cable சங்கர் said...

வர்ற சனியில்லாம அடுத்த சனி வச்சுரவோமா..?

Raju said...

இந்த பதிவில் கேபிள் சங்கர் இல்லைன்னு பார்த்து, கொந்தளிச்சு வந்தா
பின்னூட்டத்துல இருக்காப்லயா..?
ரைட்டு.

கார்க்கிபவா said...

பதிவர் ச்ந்திப்பே சனிதான் என்பதால் சனிக்கிழமை வைப்பதை நான் வரவேற்கிறேன்

மணிஜி said...

சனிப்பொணம் தனிப்போககூடாதுன்னு நானும் வர்றேன்

தராசு said...

அடுத்த சனின்னா ஓ.கே.

ஊர்சுற்றி said...

அட அத்திரி, நீங்க பள்ளிக்கரணையிலயா இருக்கீங்க! நான் வேளச்சேரிலதான் இருக்கேங்க.

எந்த சந்திப்பையும் 'பன்றிக்காய்ச்சல்' பறந்து போனதுக்கு அப்புறமா வைச்சிக்கலாமே. இல்லைன்னா, 'பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பதிவர்கள்' னு தொடர் பதிவுகள் வரும். :)))))

அ.மு.செய்யது said...

அண்ணே பதிவர் சந்திப்பை பூனேவுல வச்சிருக்கரலாம்ணே !!!

Anonymous said...

ம்...ம். பதிவர் சந்திப்புல ஏதோவது அவசர தீர்மானம் நிறைவேற்ற போறீங்களா? இல்ல பன்றிக்காய்சலுக்கு புது மருந்த அறிமுகப்படுத்த போறீங்களா? நடக்கட்டும்...நடக்கட்டும்.

ஹேமா said...

கொடுத்து வச்சவங்க....

வால்பையன் said...

//நீங்க தண்ணி அதிகமா யூஸ் பண்றீங்க ஆபடினு வேற அட்வைஸ்//

save water
drink only beer!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.

முரளிகண்ணன் said...

எல்லோரும் மாஸ்க் போட்டுட்டு வந்துடுங்கப்பா

அத்திரி said...

//Cable Sankar said...
வர்ற சனியில்லாம அடுத்த சனி வச்சுரவோமா..?//

அண்ணன் சொன்னா சரிதான்

// டக்ளஸ்... said...
இந்த பதிவில் கேபிள் சங்கர் இல்லைன்னு பார்த்து, கொந்தளிச்சு வந்தா
பின்னூட்டத்துல இருக்காப்லயா..?
ரைட்டு.//]

எப்பவுமே ரத்த பூமியா இருக்கும்னு நினைச்சா எப்படி//// நன்றி டக்ளஸ்

அத்திரி said...

//கார்க்கி said...
பதிவர் ச்ந்திப்பே சனிதான் என்பதால் சனிக்கிழமை வைப்பதை நான் வரவேற்கிறேன்//


ஏன் இப்படி///// நன்றி

அத்திரி said...

// தண்டோரா ...... said...
சனிப்பொணம் தனிப்போககூடாதுன்னு நானும் வர்றேன்//

வாங்க அண்ணே நேர்ல பேசலாம்ம்ம்ம்ம்ம்ம்.சண்ட போடலாம்

அத்திரி said...

//தராசு said...
அடுத்த சனின்னா ஓ.கே.//


வாங்க அண்ணே

அத்திரி said...

//ஊர்சுற்றி said...
அட அத்திரி, நீங்க பள்ளிக்கரணையிலயா இருக்கீங்க! நான் வேளச்சேரிலதான் இருக்கேங்க.
எந்த சந்திப்பையும் 'பன்றிக்காய்ச்சல்' பறந்து போனதுக்கு அப்புறமா வைச்சிக்கலாமே. இல்லைன்னா, 'பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பதிவர்கள்' னு தொடர் பதிவுகள் வரும். :)))))//

நேர்ல பாக்கலாம்......ஊர்சுற்றி நன்றி

அத்திரி said...

// அ.மு.செய்யது said...
அண்ணே பதிவர் சந்திப்பை பூனேவுல வச்சிருக்கரலாம்ணே !!!//

தம்பி ஏன் இந்த கொலைவெறி??

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
ம்...ம். பதிவர் சந்திப்புல ஏதோவது அவசர தீர்மானம் நிறைவேற்ற போறீங்களா? இல்ல பன்றிக்காய்சலுக்கு புது மருந்த அறிமுகப்படுத்த போறீங்களா? நடக்கட்டும்...நடக்கட்டும்.//

டேய் அடங்குடா.........

அத்திரி said...

// ஹேமா said...
கொடுத்து வச்சவங்க....//

நன்றி ஹேமா

அத்திரி said...

//வால்பையன் said...
//நீங்க தண்ணி அதிகமா யூஸ் பண்றீங்க ஆபடினு வேற அட்வைஸ்//
save water
drink only beer!//

அட்வைஸ்க்கு ரொம்ப நன்றி வால்பையன்

அத்திரி said...

//ஸ்ரீ said...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.//

நன்றி ஸ்ரீ

அத்திரி said...

//முரளிகண்ணன் said...
எல்லோரும் மாஸ்க் போட்டுட்டு வந்துடுங்கப்பா//

சரிங்க தல

ஊர்சுற்றி said...

என்ன ஸ்ரீ, நீங்க வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிட்டீங்க! நீங்க வரலையா?