Wednesday, January 6, 2010

சாருவிடம் கடன் கேட்ட கேபிள் சங்கர்




      அப்துல்லா அண்ணன்,வெண்பூ,டம்பீ மேவியுடன் நான்
  
போன வருடம் வரைக்கும் புத்தக கண்காட்சிக்கு போனது கிடையாது. ஆனாலும் நம்ம கா.பா விடுவதாக இல்லை... நானும் ரவுடி ஆகிட்டேன்.நீங்க அந்த புக்கை வாங்கிப்பாருங்க அப்படினார்.. இல்லப்பா நம்ம அறிவு விகடன் ,குமுதம் அப்படினே இருக்கட்டுமேன்னு சொன்னேன்.எஸ்.ரா எழுதியதெல்லாம் படிச்சதில்லையா? அப்படினார்..படிச்சிருக்கேனே ....எதுல.விகடன்லதான்...... ஆளு ரொம்ப டென்சன் ஆகிட்டார்........ புக் வாங்கி படிங்கய்யா அப்படினார்.....அந்த மாதிரி எலக்கிய புக்கெல்லாம் வாங்குன பழக்கமும் கிடையாது, படிச்ச பழக்கமும் கிடையாதுனேன்....


தன்னுடைய கவிதையை புத்தகத்தில் ஆர்வமுடன் தேடும் யூத் தண்டோரா, அருகில் நான்.

இருந்தாலும் புரொபசர் சொன்னா கேக்கனுமில்ல ...போன 2ஆம் தேதி கேபிளுடன் புத்தக கண்காட்சியில் ஆஜர் ஆனேன்... நானே எதிர்பார்க்காத கூட்டம்.... எடுத்த எடுப்பிலே தண்டோராவும் நானும் வம்சி புக் ஸ்டாலுக்குச்சென்றோம்.. 10ஆம் வகுப்பு பையன் ரிசல்ட் பாக்குற மாதிரி தண்டோரா அண்ணன் தன்னுடைய கவிதை வந்திருக்கானு ரொம்ப ஆவலா புக்கை புரட்டினார்..... அது கன்பார்ம் ஆனவுடன் அதை வாங்கினார்... நானுன் என் பங்குக்கு இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்.... அப்படியே உயிரைமை ஸ்டாலுக்கு சென்றோம்.... அப்துல்லா, நர்சிம்,சங்கர்,நித்யகுமாரன்,வெண்பூ, அகநாழிகை உட்பட எல்லோரும் அங்கே இருந்தார்கள்.சாருவுடனும்,எஸ்ராவுடனும் போட்டோ எடுத்துக்கொண்டனர்.. அப்பொது சாருவுக்கு டீ தந்தார் ஒருவர். அதை வாங்கிய அவர் எனக்கு இப்ப இது வேண்டாம் நீங்க யாராவது குடிங்க என்றவுடன்.... கேபிள் அண்ணன் நைசாக அந்த டீயை என்னிடம் தள்ளிவிட்டார்..புத்தக கண்காட்சியை விட்டு வெளியே வரும்போது டம்பிமேவிஐ சந்தித்தோம்..... தனக்கு 21வயதுதான் ஆகிறது என்று சத்தியம் பண்ணாத குறையாக சொன்னார். எதுக்கு அப்படி சொன்னார்னே தெரியலை..அவருடன் போட்டோ எடுத்துக்கொணடோம்.........

 பதிவர் சங்கரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.... அவரும் எங்க ஊர்தான் அம்பாசமுத்திரம். அடுத்ததாக யூத்துகளெல்லாம் வட்ட மேசை மாநாடு நடத்துனாங்க.. சின்னப்பையனான நான் ஒரு ஓரமாக ஒதுங்கி கொண்டேன்.சாரு நந்தலாலா படத்தை ரொம்பவும் சிலாகித்து பேசத்தொடங்கினார்...கேபிள் சங்கரும் கூடவே இருந்ததாலோ என்னவோ சினிமாவை பற்றியே அவர்கள் பேச்சு தொடர்ந்தது...அப்துல்லாவிடம் சாரு நீங்கள் கண்டிப்பாக ஒரு படத்திலாவது கதாநாயகனாக நடிக்க வேண்டு என்று அன்பு கட்டளை இட்டார்....... மாநாடு முடிந்து வெளியே வந்தவுடன் கேபிள் சாருவிடம் நான் படம் எடுத்தால் பங்குலாவின் கதாபாத்திரத்தை பயன்படுத்துவேன் அப்படினு கடன் கேட்டார்........ சாரு என்ன சொன்னார்னு தெரியல.......





கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்


1.கிளிஞ்சலகள் பறக்கின்றன--- 48 பதிவர்களின் கவிதை தொகுப்பு
2.பெருவெளிச்சலனங்கள் --22 பதிவர்களின் அனுபவக்கட்டுரைகள்


இரண்டு புத்தகங்களுமே வம்சி புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டு புத்தகங்களின் விலை ரூபாய் 100.( கண்காட்சியில் விலை ரூபாய் 90)


அண்ணன் தண்டோரா எனக்கு அன்பளிப்பாக கொடுத்த புத்தகங்கள்
அய்யனார் கம்மா
கருவேல நிழல்கள்.

31 comments:

சங்கர் said...

அந்த டீயோட அருமை பெருமைகள் பத்தி இன்னும் விரிவா சொல்லியிருக்கலாம், ஒருவேளை தனி பதிவெழுத எண்ணமா?
:)))

சிநேகிதன் அக்பர் said...

புத்தக விமர்சனம் போடுங்க பாஸ்.

அப்படியாவது எங்க தாகத்தை தீர்த்துகிடுதோம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

//// அக்பர் said...

புத்தக விமர்சனம் போடுங்க பாஸ்.

அப்படியாவது எங்க தாகத்தை தீர்த்துகிடுதோம். ////

repeateee....

குப்பன்.யாஹூ said...

I think for Cable's film he can appoint Chaaru as dialogue writer.

இராகவன் நைஜிரியா said...

ம்... என்ஜாய் பண்ணுங்க மக்கா..

கொடுத்து வச்சவங்க..

நசரேயன் said...

நான் தான் அண்ணாச்சின்னு சொல்லணும் இனிமேல

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present sir

Cable சங்கர் said...

யோவ்.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் அதையெலலம் பதிவு போடுவியா..? இது உன்ன திட்டி ஒரு பதிவு போடறேன்

தராசு said...

இப்படி தலைப்பு வைத்து எங்கள் யூத் சங்கத் தலைவரை வேண்டுமென்றே அவமானப் படுத்திய அத்திரி அண்ணனை வன்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன்.

பாபு said...

sowkiyamaa?

உண்மைத்தமிழன் said...

டேய் ராசா..

இப்படி எத்தனை பேருடா கிளம்பிருக்கீங்க..!

ஏற்கெனவே தாத்தா மாதிரியிருக்குற ஒருத்தரை யூத்துன்னு சொல்லி அலம்புனது பத்தாதா..? இப்ப தண்டோராவையும் இழுக்குறியா..?

பிய்ச்சுருவேன் பிய்ச்சு..!

தண்டோரா சித்தப்பா இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க..

பய ஒரு பாசத்துல பொங்கிட்டான்..!!!

ஹேமா said...

வந்தேன் சார்.

CS. Mohan Kumar said...

உங்க தலைப்பு பார்த்து ஷாக் ஆகி வந்தேன். நல்லா வைக்கிறீங்கப்பா தலைப்பு

அதானே சாருவிடம் அவரை பத்தி தெரியாதவங்க வேண்ணா கடன் கேட்கலாம். கேபிள் கேட்பதாவது?

துபாய் ராஜா said...

என்ஜாய்... :))

Thamira said...

என் கவிதையும் அந்த புக்கில் வந்திருப்பதை வேண்டுமென்றே மறைத்த உங்களை கண்டிக்கிறேன். :‍-))

கலையரசன் said...

கஷ்டம்தான்.. யூத் எல்லாம் ஒரே இடத்து வச்சி மேய்கிறது.. கஷ்டம்தான்!

Henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

கார்க்கிபவா said...

// தனக்கு 21வயதுதான் ஆகிறது //

நல்ல காமெடி பதிவு சகா

(மேலே சொன்ன வரியில்லாமல் பல காமெடியன்களைப் பற்றியும் சொல்லியிருக்கிங்க)

மேவி... said...

நீங்க தானே என்னை யூத்தா என்று கேட்டிங்க ....அதற்க்கு தான் பதிலளித்தேன் ......

ஆனா மனசு அளவுல நான் இன்னும் 16 தான் ....

சின்ன பையன் நானு .......

மேவி... said...

கார்க்கி உங்களுக்கு 20 வயது தானே .......

Anonymous said...

inka enna nadakuthu?

அத்திரி said...

//சங்கர் said...
அந்த டீயோட அருமை பெருமைகள் பத்தி இன்னும் விரிவா சொல்லியிருக்கலாம், ஒருவேளை தனி பதிவெழுத எண்ணமா?
:)))
//

ஒரு பதிவு எழுதவே நாக்கு தள்ளுது இதுல அந்த கொடுமைய எழுதவா?? நன்றி சங்கர்

// அக்பர் said...
புத்தக விமர்சனம் போடுங்க பாஸ்.
அப்படியாவது எங்க தாகத்தை தீர்த்துகிடுதோம்.//

போட்டுடுவோம் அக்பர்.நன்றி

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//// அக்பர் said...
புத்தக விமர்சனம் போடுங்க பாஸ்.
அப்படியாவது எங்க தாகத்தை தீர்த்துகிடுதோம். ////

repeateee....//

நன்றி ஸ்டார்ஜன்

அத்திரி said...

//குப்பன்.யாஹூ said...
I think for Cable's film he can appoint Chaaru as dialogue writer.//

ஹாஹா நல்ல காமெடி நன்றி குப்பன்

// இராகவன் நைஜிரியா said...
ம்... என்ஜாய் பண்ணுங்க மக்கா..

கொடுத்து வச்சவங்க..//

நன்றி ராகவன்

அத்திரி said...

//நசரேயன் said...
நான் தான் அண்ணாச்சின்னு சொல்லணும் இனிமேல//

போட்டோவ பார்த்து எந்த முடிவுக்கும் வரக்கூடாது அண்ணாச்சி

//T.V.Radhakrishnan said...
Present sir//

நன்றி ஐயா

அத்திரி said...

//Cable Sankar said...
யோவ்.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் அதையெலலம் பதிவு போடுவியா..? இது உன்ன திட்டி ஒரு பதிவு போடறேன்//

ஹிஹிஹி- அண்ணே ஒரு விளம்பரம்ம்ம்ம்.......

// தராசு said...
இப்படி தலைப்பு வைத்து எங்கள் யூத் சங்கத் தலைவரை வேண்டுமென்றே அவமானப் படுத்திய அத்திரி அண்ணனை வன்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன்.//

நன்றி யூத் அண்ணாச்சி

அத்திரி said...

பாபு said...
sowkiyamaa?

நல்லாருக்கேன் பாபு.நன்றி


//உண்மைத் தமிழன்(15270788164745573644
தண்டோரா சித்தப்பா இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க..//

இதுல ஏதும் உள்குத்து இல்லையே அண்ணே

அத்திரி said...

// ஹேமா said...
வந்தேன் சார்.//

நன்றி ஹேமா

//மோகன் குமார் said...
உங்க தலைப்பு பார்த்து ஷாக் ஆகி வந்தேன். நல்லா வைக்கிறீங்கப்பா தலைப்பு
//

நன்றி மோகன்குமார்

அத்திரி said...

//துபாய் ராஜா said...
என்ஜாய்... :))//

நன்றி துபாய்ராஜா

//ஆதிமூலகிருஷ்ணன் said...
என் கவிதையும் அந்த புக்கில் வந்திருப்பதை வேண்டுமென்றே மறைத்த உங்களை கண்டிக்கிறேன். :‍-))//


அண்ணே ஏன் இப்படி?

அத்திரி said...

//கலையரசன் said...
கஷ்டம்தான்.. யூத் எல்லாம் ஒரே இடத்து வச்சி மேய்கிறது.. கஷ்டம்தான்
//

சரியாச்சொன்னீங்க கலையரசன். நன்றி

//கார்க்கி said...
// தனக்கு 21வயதுதான் ஆகிறது //

நல்ல காமெடி பதிவு சகா
(மேலே சொன்ன வரியில்லாமல் பல காமெடியன்களைப் பற்றியும் சொல்லியிருக்கிங்க)//

சகா இது காமெடி பதிவா.........ஆங்,...

அத்திரி said...

// ஸ்ரீ said...
:-))//

நன்றி ஸ்ரீ

// டம்பி மேவீ said...
நீங்க தானே என்னை யூத்தா என்று கேட்டிங்க ....அதற்க்கு தான் பதிலளித்தேன் ......
ஆனா மனசு அளவுல நான் இன்னும் 16 தான் ....

சின்ன பையன் நானு .......
//

நான் அப்படி கேக்கவேயில்லையே..... இருந்தாலும் ஒரு ஆளை பாத்தா தெரியாதா.........உண்மையிலே நீங்க சின்ன பையன் தான்

அத்திரி said...

//டம்பி மேவீ said...
கார்க்கி உங்களுக்கு 20 வயது தானே .......//

சகாவுக்கு 15வயசு முடிஞ்சி 16வயசு நடக்குப்பா

//கடையம் ஆனந்த் said...
inka enna nadakuthu?//

இப்பதான் தூங்கி முழிச்சியா?????///