Sunday, January 31, 2010

மத்திய அமைச்சரை முற்றுகையிட்ட விவசாயிகள்

மரபணு மாற்று கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிட அமெரிக்க கம்பெனிய விட நம்ம ஊர் அரசியல்வாதிகள் ரொம்ப ஆர்வம் காட்டுறங்க என்ன காரணம்னு தெரியல. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ளது.. ஏனெனில் அந்த கத்தரிக்காயில் இருக்கும் கிரை 1ஏசி என்ற வைரஸில் விஷத்தன்மை உள்ளது என்றும் இதை பயிரிட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் வேளாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால் உடலில் எதிர் விளைவுகள் ஏற்படும் எனவும் செய்தி நிலவுகிறது... மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதை சாப்பிடக்கூடாது என்ற செய்தியும் யோசிக்க வைக்கிறது.

இவ்வளவு பின்விளைவை ஏற்படுத்தக்கூடிய இந்த கத்தரிக்காயை அனுமதிப்பது தொடர்பாக மத்திய சுற்று சூழல் அமைச்சர் 7 நகரங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறார். இதில் சென்னை கிடையாது..எனென்றால் இந்த கத்தரிக்காய் குறித்த விழிப்புணர்வு குறும் படம் எடுத்து முதல்வரிடம் காட்டி தற்போதைக்கு இந்த கத்தரிக்காய்க்கு தடை வித்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த காரணத்தாலே சென்னையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்து விட்டார்.

இந்நிலையில் இன்று மரபணு மாற்று கத்தரிக்காய் குறித்த கூட்டம் ஹைதரபாத்தில் நடைபெற்றது..கூட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சூழ்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்... இதனால் பெரும் பரபரப்பு நிலவியது அந்த அரங்கில்..பின்னர் பேட்டியளித்த அமைச்சர் பிப்ரவரி 10ஆம் தேதி இது குறித்து முடிவடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அனைத்து விவசாய அமைப்புகளுமே இந்த மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஏன் இந்த கருத்து கேட்பு கூட்டம்.???????.....எல்லா நாடுகளும் இந்த கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ள நிலையில் எதற்கு இந்த சல்ஜாப்பு.......ஒரு வேளை அந்த அமெரிக்க கம்பெனியிடம் நம்மை அடகு வைத்து பொட்டி வாங்கிட்டாங்களோ..இதுக்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினோம்.............என்னவோ போங்க..............

12 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாத்தான் யோசிக்கிறாங்க ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹைய்யா நாந்தான் முதல்லயா

துபாய் ராஜா said...

விவசாயிகளின் விழிப்புணர்வு மகிழ்ச்சி தருகிறது. மத்திய அரசு மற்றும் அமைச்சரின் பொறுப்பற்ற நடவடிக்கை கண்டணத்திற்குரியது.பொது மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து மரபணு விதைகளுக்கு நிரந்தர தடை விதிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

நல்லதொரு பகிர்வு.

சிநேகிதன் அக்பர் said...

கத்தரிக்காய் முத்துனா சந்தைக்கு வந்துதான் ஆகனும்.

நம் அரசியல்வாதிகளைப்பற்றியும் தெரிய வரும்.

பணம்தான் முக்கியமாப்போச்சு.

ஜெட்லி... said...

//இதுக்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினோம்.............என்னவோ போங்க.............. //

அப்படியா,,,,
நல்லது செய்வாங்கன்னுதான்
நீங்க ஒட்டு போட்டிங்களா....??

தராசு said...

//எல்லா நாடுகளும் இந்த கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ள நிலையில் எதற்கு இந்த சல்ஜாப்பு.......ஒரு வேளை அந்த அமெரிக்க கம்பெனியிடம் நம்மை அடகு வைத்து பொட்டி வாங்கிட்டாங்களோ.//

அப்ப உங்களுக்கு இதுவரை இந்த மேட்டர் தெரியாதா?????

எறும்பு said...

Nice post

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்பவே முக்கியமான விஷயம்.. ஆனா மக்கள் இதப் பத்தி யோசிப்பாங்களா...:-(((((((((

அத்திரி said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்லாத்தான் யோசிக்கிறாங்க ...//

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்


// துபாய் ராஜா said...
விவசாயிகளின் விழிப்புணர்வு மகிழ்ச்சி தருகிறது. மத்திய அரசு மற்றும் அமைச்சரின் பொறுப்பற்ற நடவடிக்கை கண்டணத்திற்குரியது.பொது மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து மரபணு விதைகளுக்கு நிரந்தர தடை விதிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.//

கருத்துக்கு நன்றி அண்ணே.......... என்னதான் போராட்டம் பண்ணினாலும்......இவனுங்க இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வரமாட்டாங்க .அப்படியே சைலண்டா உள்ள கொண்டு வந்திருவாங்களோன்னு ஒரு டவுட்டு

அத்திரி said...

//அக்பர் said...
கத்தரிக்காய் முத்துனா சந்தைக்கு வந்துதான் ஆகனும்.நம் அரசியல்வாதிகளைப்பற்றியும் தெரிய வரும்.பணம்தான் முக்கியமாப்போச்சு.//

கருத்துக்கு நன்றி அக்பர்

//ஜெட்லி said...
//இதுக்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினோம்.............என்னவோ போங்க.............. //
அப்படியா,,,,
நல்லது செய்வாங்கன்னுதான்
நீங்க ஒட்டு போட்டிங்களா....??
//

ஊர்ல ஒன்னு சொல்வாங்க உபயோகம் இல்லானா பரவாயில்ல உபத்திரவம் பண்ணாம இரு அப்படிம்பாங்க ..அததான் சொன்னேன்.. நன்றி ஜெட்லி

அத்திரி said...

// T.V.Radhakrishnan.. said...
நல்ல பகிர்வு.//

நன்றி ஐயா

தராசு said...
//எல்லா நாடுகளும் இந்த கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ள நிலையில் எதற்கு இந்த சல்ஜாப்பு.......ஒரு வேளை அந்த அமெரிக்க கம்பெனியிடம் நம்மை அடகு வைத்து பொட்டி வாங்கிட்டாங்களோ.//அப்ப உங்களுக்கு இதுவரை இந்த மேட்டர் தெரியாதா?????//

அண்ணாச்சி உங்க அளவுக்கு வெவரம் தெரியாது..நன்றி

அத்திரி said...

// எறும்பு said...
Nice post
//

நன்றி எறும்பு

// கார்த்திகைப் பாண்டியன் said...
ரொம்பவே முக்கியமான விஷயம்.. ஆனா மக்கள் இதப் பத்தி யோசிப்பாங்களா...:-(((((((((
//

பாக்கலாம் புரொபசர்...நன்றி